யார்ரா இது:
என் பெயர் த. செந்தமிழ். பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்துக் கொண்டிருப்பது எல்லாம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி. முதுநிலை இயற்பியல் படித்துவிட்டு தமிழ்நாட்டின் பல லட்சம் இளைஞர்களைப் போலவே பிடித்தோ, பிடிக்காமலோ, வருடங்களை ஓட்டுவதற்கோ இல்லை எதற்கே என்று தெரியாமல் நானும் TNPSC தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறேன். இதுபோதும் என்று நினைக்கிறேன்.
ப்ளாக் ஆரம்பித்ததற்குக் காரணம்:
சரியோ தவறோ நினைப்பதைக் கிறுக்குவதற்கு ஓர் இடம் கிடைத்திருக்கிறது. நல்லா இருந்தா முடிஞ்சா நாலு நல்ல வார்த்தை பதியவும். நல்லா இல்லனா, தப்பா இருந்தா அதைக் கழுவி ஊத்தவும், சரி செய்யவும், விவாதம் பண்ணவும் இங்கு இடமுண்டு.
வாழ்க்கை தத்துவம்:
வாழ்க்கைல எல்லாமே அரகொறதா. எல்லாத்தயும் நல்லது, கெட்டது, புடிச்சிருக்கு, புடிக்கல, வேணும், வேணாம்னு அறுதியிட்டு சொல்ல முடியாது. அப்பப்ப அந்தந்த சமயத்துல எது சரின்னு படுதோ அத பண்ணிட்டு போறோம். அது என்னவா வேணா மாறலாம். முழுசா எதுவும் எப்பவும் நம்மளோட இல்லாததுனால எல்லாமே, "இருக்கு..ஆனா இல்ல..."
தொடர்புக்கு:
sentamilvanan2000@gmail.com
Comments