Skip to main content

Posts

Showing posts with the label BOOK REVIEW

படித்துதான் ஆகணுமா?- ஆர். அபிலாஷ்

  ஆர்.‌ அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம்.  ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது.   கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...

வெண்ணிற இரவுகள்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

  கையில் நூலெடுத்து வாசிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி கூட இல்லாத சமயத்தில், தஸ்தயேவ்ஸ்கியியை வாசிக்கலாம் என்ற திட்டமும் இல்லாமல், எப்படி வெண்ணிற இரவுகளை கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. பனி படர்ந்த ஆளரவமற்ற சாலையில், பத்தடி தூரத்தில் மங்கலான ஒளியில் ஒரு மனித உருவம் உங்களை நோக்கி வருகிறது. நெருங்க நெருங்க மெல்ல அதன் நடை, உருவத்தோற்றத்தில் ஏதோ ஓர் உள்ளார்ந்த பரிச்சயம் தெரிகிறது‌. எதிரில் நேருக்கு நேர் அதன் முகத்தைக் காண்கிறீர்கள். அச்சு அசப்பில் அது நீங்கள் தான். அந்தக் கணத்தில் எப்படியொரு  தாங்கொணா அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாவீர்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்கையில், அதன் நாயகன் தன் கதையைச் சொல்ல சொல்ல அப்படியொரு அதிர்ச்சியிலும் சொல்லவியலா ஏதோ ஓர் உணர்வாலும் பீடிக்கப்பட்டேன்.  சிறு வயதிலிருந்தே "வித்தியாசமானவள்" எனும் அடைமொழியைச் சுமந்து திரியும் எனக்கு(அப்படி திரிவதில் கொஞ்சம் பெருமையே ஆயினும்) நாம நெஜமாவே "அப்நார்மலோ" என்று பல முறை என்னை நானே சந்தேகித்து வருந்திய நாட்கள் உண்டு. அதை தகர்த்தெறிந்தது சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டன்ஷியலிஸமு...

புருஷன்-அராத்து

  அராத்துவின் எழுத்தில், "பொண்டாட்டி", "பிரேக்கப் குறுங்கதைகள்" இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. "பொண்டாட்டி" பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. பொண்டாட்டினா என்ன, ஒரு ஆம்பளைக்கு பொண்டாட்டின்றவ யாரு, பொண்டாட்டின்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த சமூகத்துல என்ன பிம்பம் இருக்கு என்பது போன்ற முக்கியமான கேள்விகளை அது முன்வைத்திருக்கும். பெண் கதாப்பாத்திரங்களைச் சிறப்பாக எழுதும் ஆண் எழுத்தாளர்களை, ஒரு பெண்ணா உருமாறி எழுதிருக்காரு, பெண்ணுடல்ல ஊடுருவி எழுதிருக்காரு என்றெல்லாம் பலர் சொல்லுவர். அதிலெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாமல் இருந்தது. புருஷனை வாசித்துவிட்டு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. இப்பொழுது யோசித்தால், பொண்டாட்டி, அரைகுறையாக பெண் வேடமணிந்த ஆண் எழுதியது. புருஷன், முழுக்க முழுக்க எந்த ஒப்பனையும் இல்லாத ஒரு ஆண் எழுதியது. அதனால் தான் பொண்டாட்டியை விட பல மடங்கு சிறப்பாக புருஷன் வந்துள்ளது. நாவல் குறித்த சாரு நிவேதிதாவின் உரையைக் கேட்டுவிட்டு புருஷனை வாசித்த பொழுது பல விஷயங்களை கூடுதலாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. பின்நவீனத்துவம்,...

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

சாத்தானின் கடவுள்- பா.ராகவன்

  கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்றாங்களே, உண்மையிலே மேல தான் இருக்கானா? இல்ல கீழ, சைட்லனு, எங்கதான் இருப்பான்? மொதல்ல, அந்த 'இருப்பான்'ன்றதே இருப்பானா, இருக்காளா, இல்ல இருக்குதா?  காக்கா, குருவி, ஈ, எறும்பு, நாய், பூனைனு அதுங்களுக்கும் நமக்கு மாரியம்மா, காளியம்மானு ஒவ்வொன்னுத்துக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்குற மாதிரி தனித்தனியா கடவுள் இருந்து, சாமி கும்பிட்டு வேண்டிக்குங்களா என்ன? கடவுள் என்னும் கருத்துரு, ஒரு மனிதனுக்கு அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள். எழாத ஆளில்லை, நாளில்லை. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்?  இன்றைய நாளில் எதற்கும் வரலாறு எழுதப்படாமல் இல்லை. பா. ராகவனே உணவின் வரலாறு, ஆர். எஸ். எஸ் வரலாறு, காஷ்மீர் வரலாறு, இராமானுஜர் வரலாறென்று எக்கச்க்கமாக எழுதியிருக்கிறார். அப்படியிருக்க, கடவுளின் வரலாறை ஒருவர் எழுத முடியுமா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன? அதைத்தான் காலங்காலமாக மதங்கள், இன்னபிற அமைப்புகளின் மூலம் ஆன்மீகவாதிகள் போதித்து வருகின்றார்களே. அப்படியிருக்க, பாரா என்ன விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் ...

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

  முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில்  நான் உன்னுடன் இல்லை என்றால்  கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.  உரிமைக்  கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை  சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன். அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண...

தருமபுரி பூர்வ சரித்திரம்

சங்க கால ஆட்சியாளர்களான சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்திருக்காவிடினும் தான் சார்ந்த பகுதி முற்காலத்தில் எந்த அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமிருக்கும். மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தங்களைப் பாண்டிய நாடு என்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சோழ நாடு என்றும் கோவையைச்  சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சேர நாடு, கொங்கு நாடு என்றும் வகைமைப்படுத்திக் கொள்வர். ஆனால் யாதொருவராலும் கண்டுகொள்ளப்படாத, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தினர், நீங்களெல்லாம் எந்த அரசின் ஆட்சிப்பகுதியில் இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்கள். நாமெல்லாம் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிப் பகுதியில் வருவோம், அவனது மூதாதையர்கள் சேர மரபைச் சார்ந்தவர்கள். அதனால் நாம் சேர மண்டலத்தைச் சார்ந்தவராக இருப்போம்,  அதியமான் சோழப் பேரரசின் கீழ் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் சோழ மண்டலமாக இருக்கலாம் மாவட்டத்தில் எத்தனை கல்வெட்டுகள் கன்னட...

சாரு நிவேதிதாவின் இரு நூல்கள் வெளியீடு

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் "தியேட்டர் ஆஃப் குருயல்டி", என்ற நாடகக் கோட்பாட்டை உருவாக்கிய ஃப்ரெஞ்ச் நாடகவியலாளர் அந்தோனின் ஆர்த்தோவை மையமாக வைத்து சாரு நிவேதிதா அவர்கள் எழுதியிருக்கும் நாடக நூல் வெளியாகியிருக்கிறது. ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின் மூலம்  உலகம் முழுவதும் இன்று நாடகங்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால் அவரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் நாடகங்கள் உலக அரங்கிலேயே மிகச் சொற்பம்தான். அவ்வகையில் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நாடக நூல் இது. ஆர்த்தோவைப் பற்றி அறியாதவர்களும் அவர் என்னவாக இருந்தார் என்பதை நாடகத்தில் உணர முடிகிறது. ஆர்த்தோவை உள்வாங்கி எழுதியிருக்கும் சாருவின் மொழிநடையில் நாமே ஆர்த்தோவாக உருமாறும் மாயம் நடந்துள்ளது. ஐரோப்பா அழியப் போகிறது, இயற்கையிடம் சரணடையுங்கள் என்று எச்சரித்த கலைஞனை, மின்னதிர்ச்சி கொடுத்தே கொன்ற கொடூரத்தை அறிய மட்டுமல்லாமல், பொருளீட்டும் பேராசையில் இயந்திர கதியில் சென்றுக் கொண்டிருக்கும் நாம், நம் ஆன்மாவை இழக்காதிருத்தலின் அவசியத்தை உணர இந்நாடகத்தை வாசித்தல் அவசியமாகிறது. நூல்             ...