Skip to main content

கொட்டுக்காளி



'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன். 

வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன் வழியாகப் பார்ப்பது என்று தெரியவில்லை. 

நாயகன், நாயகி, ஒரு பிரச்சனை, வில்லன், திருப்பம், க்ளைமாக்ஸ் என படம் நகர வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. முறைப்பையனான சூரியை திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞனை காதலிப்பதாகச் சொல்லும் நாயகிக்கு பேயோட்டினால் சரியாகிவிடும் என நினைத்து இருவரின் குடும்பமும் சேர்ந்து நாயகியை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்லும் பயணம் தான் கதை. இப்படத்தின் கதையிலும் கதை சொல்லலிலும் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமில்லையா. சேவல், காட்டுக்குள் குலசாமி, மூர்க்கமான நாயகன், கரடு, காளை மாடு, பேயோட்டி இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறீர்கள். 

பாருங்கள், இந்த நிலத்தில் எப்படி ஆண்கள் பெண்களை கீழ்த்தரமாக நடத்துகிறார்கள், ஒரு பெண் காதலித்தால் அவளுக்கு பேய் பிடித்துவிட்டதென நினைக்குமளவிற்கு பிற்போக்காக இருக்கிறார்கள், பேயோட்டுகிறேன் என ஒருவன் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறான், இந்த வறண்ட நிலத்தைப் பாருங்கள் என்கிறீர்களா. நாயகின் நிலையைப் பற்றியோ, சூரியின் குணாம்சத்தைக் குறித்தோ, அந்த நிலத்தைக் குறித்தோ, மக்களைக் குறித்தோ எந்த சிந்தனையையும் அது தூண்டவில்லை. வெறுமனே காட்சிகள் நகர்கின்றன. இயக்குநரின் முந்தைய படமான கூழாங்கல்லிலும் இதுவே நடந்தது. 

ஒன்றரை மணிநேரப் படத்தில் முதல் முக்கால் மணிநேரத்தைவிட அடுத்த முக்கால் மணிநேரம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது. ஆற்றுப்பாலம் ஒன்றின் நடுவில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சூரி நாயகியை அடிக்க, விலக்கிவிட வரும் எல்லோரையும் அவர் அடிக்கும் காட்சி படத்தில் குறிப்பிடும்படியான காட்சி. கூழாங்கல்லிலும் நாயகன் நாயகியின் வீட்டிற்குச் சென்று சண்டை போடும் காட்சி மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும். படத்தில் நாயகன், நாயகியை விடவும் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தவர்களில் சிலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பின்னணி இசையில்லாமல், நேரடியான ஒலிகள் பயன்படுத்தியது படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. டார்க் ஹியூமர் சில இடங்களில் வேலை செய்துள்ளது. வாழை படத்தையெல்லாம் ஒப்பிடும் போது இப்படம் தேவலாம். படத்தைக் குறித்த என் கருத்துக்களில் மாறுபடுபவர்கள் கண்டிப்பாக காமெண்ட் பாக்ஸில் எழுதுங்கள். விவாதிப்போம்.



 

Comments

Popular posts from this blog

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

நகரம்(சிறுகதை)- சுஜாதா

வாசிப்பை நேசிப்போம் குழுவினர், எழுத்தாளர் அபிலாஷ் சந்திரனின் தலைமையில் “இலக்கிய விமர்சனம் எழுதும் கலை: வாசிப்பில் இருந்து எழுத்து வரை” எனும் தலைப்பில் இணைய வழியில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மதிப்புரைகள் எழுதுவது எவ்வாறு என்றொரு விரிவுரையாக இல்லாமல் பங்கேற்பாளர்களுக்கு சின்ன சின்ன இடுபணிகள் கொடுத்து, அதன் மூலம் மதிப்புரைகளின் ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதி வடிவத்தை அடைவது வரை சுவாரசியமாகக் கொண்டு சென்றார் அபிலாஷ். ஒரு கதையின் ஒவ்வொரு பத்தியையும் கட்டுடைப்பு செய்து எவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனை நோக்கி மதிப்புரையை எழுதலாம் என்று அவர் கூறியது புதிதாக இருந்தது எனக்கு. எடுத்துக்காட்டிற்காக அவர் கொண்டு வந்திருந்த, சுஜாதாவின் 'நகரம்‌'‌ சிறுகதை குறித்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதிலிருந்து அச்சிறுகதைக்கு என் மதிப்புரையை எழுதுகிறேன்.  கிராமத்திலிருந்து ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பன்னிரண்டு வயது மகளை(பாப்பாத்தி) மதுரை நகரிலிருக்கும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வள்ளியம்மாளுக்கு, அங்கு ஏற்படும் அனுபவங்களும் அவள் எ...