Skip to main content

Posts

நான் நானாக இருக்க முடியவில்லை

என்ன பாத்து யாருமே அப்பிடி சொன்னதில்ல. நீதான் மொத தடவ அப்பிடிலாம் சொல்ற. எனக்கு எவ்ளோ ஹர்டிங்கா இருக்கு தெரியுமா?  ........ சொல்ல போனா, உன் ப்ராப்ளம் என்ன தெரியுமா? உன்ன மாதிரியே மத்தவங்கள மாத்த ட்ரை பண்றது. உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியும் தனித்துவமானது. ஒருத்தங்க மாதிரியே இன்னொருத்தங்க இருந்துட்டா உலகம் என்னாகுறது? நீ என்ன மாத்த ட்ரை பண்ற. இல்ல, நான் உன்ன மாத்தலாம் எதும் ட்ரை பண்ல. நான்…. நோ நோ. நீ அதான் பண்ற. என்ன மாதிரி உன்ன மாற சொன்னா உன்னால அது முடியுமா? என் கழுத்த புடிச்சு யாரோ நெறிக்கற மாதிரியே இருக்கு எப்பவும். யூ நோ, ஹௌ ஸ்ட்ரெஸ்ஃபுல் இட் இஸ்? நீ சின்ன விஷயத்த பெருசு பண்ற. நான் சொன்னது எல்லாமே ரொம்ப சாதாரண விஷயங்க. அத எதுக்கு இவ்ளோ டீப்பா உன் மைன்ட்கு…. ப்ளீஸ். எது சின்ன விஷயம்? உனக்கு புரியுதா இல்லையா? நான் ரொம்ப பொறுமையா பேசிட்ருக்கேன்.  நான் நானா இருக்க முடியல இந்த ரூம்ல.  ஏய். இது ரொம்ப பெரிய கம்ப்ளெய்ன்ட் என் மேல.  எல்லாம் ஓ.கே. இது வர நடந்தது எல்லாம் கூட ஒரு வகைல என் நல்லதுக்கு தான் நீ சொன்னன்னு எடுத்துக்குறேன். ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த...
Recent posts

Minxie- Araathu

  ‘Minxie’ கிண்டில் பதிப்பாக வந்தபொழுது, ஆங்கிலத்தில் வாசிக்க சற்று தயக்கம் இருந்ததால் தமிழில் வெளியானதும் வாசிக்கலாம் என்றிருந்தேன். ‘குட்டிமா’ வெளியானதும் கிண்டிலில் சில அத்தியாயங்கள் வாசித்தேன். அராத்துவின் எழுத்தில் எனக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவரின் தமிழ் தான். கதையின் உள்ளடக்கத்திலும் கதைசொல்லலிலும் குறை வைப்பதில்லை. ‘ஓப்பன் பண்ணா’ நாவல், கதையாக சுவாரசியமாகவே ஆரம்பித்தது. ஆனால் அதன் மொழிநடை தொடர்ந்து வாசிக்க பெரிய தடையாக இருந்தது. குட்டிமாவிலும் அதே சிக்கல். (பிற நூல்களில் இப்பிரச்சினை எனக்கில்லை). அதனால் ஆங்கிலத்தில் முயற்சிக்கலாம் என்று ‘Minxie’ வாசித்தேன். ஆரம்பகட்ட வாசகர்களும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாகவே இருந்தது. இதுதான் நான் ஆங்கிலத்தில் வாசிக்கும் முதல் நாவலும்.  சிந்து எனும் சிறுமி வீணாவாக, வஞ்சியாக பரிணமிக்கும் கதைதான் ‘Minxie’. நாவலைக் கையில் எடுத்தால் முழுமையாக வாசித்து முடித்துவிட்டு தான் கீழே வைக்க முடியும். ராக்கெட் வேகத்தில் எங்கும் தொய்வில்லாமல் கதை பறக்கிறது. நாயகி, தனக்குள் அவ்வபோது நடத்தும் உரையாடல்களுக்கு பின்னாலுள்ள உளவியல் காரணியைச்...

படித்துதான் ஆகணுமா?- ஆர். அபிலாஷ்

  ஆர்.‌ அபிலாஷின் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு கல்வியாளராக சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து விலகி நடைமுறை சார்ந்தும் தத்துவார்த்தமாகவும் கல்வி குறித்து அவர் வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. தமிழகத்தில், கல்வி குறித்தான விவாதங்களில், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாதங்களாக எதிர்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்தரப்பினர் செய்யும் ரொமாண்டிஸைஸத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதன் அவசியங்களைக் கூறுவதுமே இந்நூலின் சாராம்சம்.  ஆங்கில ஹிந்துவில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை முன்வைத்து கல்வி எவ்வாறு பணத்தைக் கடந்த அதிகார மதிப்பை கொண்டுள்ளது, தேர்வுமுறைக்கும் சாதி அதிகாரத்திற்கும் இருக்கும் தொடர்பு, அதன் பொருட்டு ஏன் மக்களால் கல்வி பட்டங்களைப் பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்று விளக்கியிருக்கும் ‘கல்விப் பண்ணைகளால் உருவான புதிய இந்தியா’ கட்டுரை முக்கியமானது.   கல்வி என்பது நிச்சயமாக இன்று வியாபாரம் தான். கல்வி இலவசமாக இருந்த பொழுது இல்லாத பிரச்சனை இப்பொழுது என்னவெனில், இத்தனை லட்சங்களைச் செலவழித்...

சென்னைப் புத்தகக் காட்சியும் இரயில் பயணமும்

சென்னைப் புத்தகக் காட்சிக்குச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாளைய விருப்பப்பட்டியலில் ஒன்றாக இருந்தது. இம்முறை சென்னையில் இருந்ததால் அது நிறைவேறிவிட்டது. வருடாவருடம் புத்தக விற்பனையை டெல்லி அப்பளக் கடையோடு ஒப்பிட்டு பலர் எழுதும் பதிவுகளை வாசித்து வாசித்து YMCA மைதானத்துக்குள் நுழைந்ததும் கண்கள் முதலில் டெல்லி அப்பளக் கடையையே தேடியது. ஈ மொய்க்கிற கூட்டம் தான்‌. முன்னரே என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்றொரு பட்டியல் வைத்திருந்து அதன் அடிப்படையில் பதிப்பகங்களின் அரங்கிற்குச் சென்றேன்.  முதலில் சென்றது ஸீரோ டிகிரிக்கு தான். சாரு இருக்கிறாரா என்று பார்த்தேன். இல்லை. வந்துவிடுவார் என்றார்கள். அவரின் மொத்த நூல்களையும் நேரில் பார்த்த பொழுது, என்று நாம் இதையனைத்தும் வாசித்து முடிக்க என்று மலைப்பாய் இருந்தது. அவரின் புதிய வரவான ‘இஞ்சி சுக்கு கடுக்காய்’ வாங்கினேன். பா. ராகவனின் மொத்த நூல்களும் இருந்தன. அவற்றின் வடிவ அளவுகள் ஆச்சரிப்படுத்தின. ஆர். அபிலாஷின் 'படித்துதான் ஆகணுமா?' வாங்கினேன். ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பி வரலாம் என்று கிளம்பினேன்.  தேசாந்திரி பதிப்பகத்தில் எஸ். ...

டிராகுலா: எ லவ் டேல்

உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது.  ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு ...

ஒன் டே கெஸ்ட்

தோழியொருத்தி அளித்த பேய்க்கதையின் உபயத்தால், இரவு முழுவதும் மணிக்கொருமுறை விழிப்பு வந்து அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தேன். விடியற்காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழிப்பு வந்து, கதவைத் திறந்தேன். ஒரு கையில் பேகுடன், இன்னொரு கையில் டிராலியை இழுத்துக் கொண்டு ஒருவள் அறையினுள் நுழைந்தாள்.  "அந்தக் காட் எனக்குக் குடுத்திருக்காங்க" என்றாள். அந்தக் கட்டில் மற்றும் இன்னொரு கபோடினில் பரப்பி வைத்திருந்த என்னுடைய பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கையில்  என்னமோ கேட்டாள் அவள்.  தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் என்னமோ உளற, தேமே என்று விழித்தாள். "நான் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன்" என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். "நல்ல வேல, நைட்டு ஃபுல்லா இன்னும் எத்தனை நாளைக்கு ரூம்மேட் இல்லாம தனியா நேத்து மாரி பயந்துகிட்டு இருப்பமோனு நெனச்சிட்டிருந்தோம். எப்பிடியோ காலைலே ஒருத்தி வந்து சேந்துட்டா. பாக்க ஓரளவுக்கு நல்ல புள்ளயாதான் தெரியுறா.‌ செட் ஆய்டும்" என பல யோசனைகளுடன் முகத்தைக் கழுவிவிட்டு, குளியலறையைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். "நான் இங்க ஒரு நாள் தான் தங்...