Skip to main content

Posts

சித்தா-ஒரு பார்வை

படம் வெளியான சமயத்தில் இருந்தே விமர்சனங்கள் நல்லபடியாக இருந்தமையால் ஒரு ஹைப்பில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதும் படத்தைப் பார்த்தாச்சு.திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கு திரைப்படக் கலையின் நுணுக்கங்களோ,கதை,திரைக்கதை வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிய அறிவெல்லாம் கிடையாது. இத்தனை வருடங்களாக படங்கள் பார்க்கிறோம்,சரியோ தவறோ நமக்குத் தெரிந்ததை எழுதலாம் என்ற துணிவு இப்பொழுதுதான் வந்துள்ளது.அதனால் என் பார்வையில் படம் எப்படி இருந்தது என்று எழுதுகிறேன். விமர்சனங்கள் இருப்பின் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கலாம். கதை என்ன? பழனி நகராட்சியில் அலுவலராகப் பணியாற்றும் சித்தார்த்(ஈஸ்வரன்) இறந்த தன் அண்ணனின் மகள்,அண்ணியுடன் வசித்து வருகிறார்.தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் நாயகிக்கும்(சக்தி) சித்தார்த்துக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதல்.இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டிருந்ததற்கு ஒரு முன்கதை இருப்பதாகக் காட்டப்படுகிறது.தன் நெருங்கிய நண்பனின் அக்கா மகள்(பொன்னி) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக,அந்தப் பழி சித்தார்த்தின் மீது விழுகிறது.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் சித்தார்த் எடுக்கும் முடிவுகளுமே கதை. பிடித்த விஷயங...

தருமபுரி பூர்வ சரித்திரம்

சங்க கால ஆட்சியாளர்களான சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்திருக்காவிடினும் தான் சார்ந்த பகுதி முற்காலத்தில் எந்த அரசின் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமிருக்கும். மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தங்களைப் பாண்டிய நாடு என்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சோழ நாடு என்றும் கோவையைச்  சுற்றியுள்ள மாவட்டத்தினர் தங்களைச் சேர நாடு, கொங்கு நாடு என்றும் வகைமைப்படுத்திக் கொள்வர். ஆனால் யாதொருவராலும் கண்டுகொள்ளப்படாத, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தினர், நீங்களெல்லாம் எந்த அரசின் ஆட்சிப்பகுதியில் இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்கள். நாமெல்லாம் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிப் பகுதியில் வருவோம், அவனது மூதாதையர்கள் சேர மரபைச் சார்ந்தவர்கள். அதனால் நாம் சேர மண்டலத்தைச் சார்ந்தவராக இருப்போம்,  அதியமான் சோழப் பேரரசின் கீழ் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் சோழ மண்டலமாக இருக்கலாம் மாவட்டத்தில் எத்தனை கல்வெட்டுகள் கன்னட...

சாரு நிவேதிதாவின் இரு நூல்கள் வெளியீடு

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் "தியேட்டர் ஆஃப் குருயல்டி", என்ற நாடகக் கோட்பாட்டை உருவாக்கிய ஃப்ரெஞ்ச் நாடகவியலாளர் அந்தோனின் ஆர்த்தோவை மையமாக வைத்து சாரு நிவேதிதா அவர்கள் எழுதியிருக்கும் நாடக நூல் வெளியாகியிருக்கிறது. ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின் மூலம்  உலகம் முழுவதும் இன்று நாடகங்கள் உருவாக்கப்படுகிறது. ஆனால் அவரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் நாடகங்கள் உலக அரங்கிலேயே மிகச் சொற்பம்தான். அவ்வகையில் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் நாடக நூல் இது. ஆர்த்தோவைப் பற்றி அறியாதவர்களும் அவர் என்னவாக இருந்தார் என்பதை நாடகத்தில் உணர முடிகிறது. ஆர்த்தோவை உள்வாங்கி எழுதியிருக்கும் சாருவின் மொழிநடையில் நாமே ஆர்த்தோவாக உருமாறும் மாயம் நடந்துள்ளது. ஐரோப்பா அழியப் போகிறது, இயற்கையிடம் சரணடையுங்கள் என்று எச்சரித்த கலைஞனை, மின்னதிர்ச்சி கொடுத்தே கொன்ற கொடூரத்தை அறிய மட்டுமல்லாமல், பொருளீட்டும் பேராசையில் இயந்திர கதியில் சென்றுக் கொண்டிருக்கும் நாம், நம் ஆன்மாவை இழக்காதிருத்தலின் அவசியத்தை உணர இந்நாடகத்தை வாசித்தல் அவசியமாகிறது. நூல்             ...

இன்செப்ஷன்-ஒரு பார்வை

கனவு, கனவுக்குள் கனவு ,அந்தக் கனவுகள் கனவு என கனவினூடே பயணித்து கனவைக் களவாடி,கனவிற்குள் மாட்டி, அதிலிருந்து தப்பித்து,கனவுக்குள் விதைத்து என கனவை வைத்து நாயகனும் அவன் கூட்டாளிகளும் ஆடும் களியாட்டமே இன்செப்ஷன். இந்தக் கதையை ஒரு நேர்க்கோட்டில் புரிந்துக் கொள்வது கடினம். நாயகன் விளக்கும் கனவுக் கோட்பாடுகளை அவன் விவரணையிலேயே நூல் பிடித்துச் சென்றால் மட்டுமே ஓரளவிற்குச் சரியாகக் கதையைப் புரிந்து கொள்ள இயலும்.அதிலிருந்து கொஞ்சம் விலகினாலும் தூக்கத்திலிருந்து விழித்த பின், கனவில் என்ன கண்டோம், எங்கு இருந்தோம் என்று காட்சிகள் மங்கி நிகழ்காலத்தில் சிக்கிக் கொள்வது போல்,நாயகனின் இன்செப்ஷன் கோட்பாட்டைச் சரியாகப் பின் தொடர முடியாமல் நாமும், இது எந்தக் கனவு, கனவுக்குள் கனவா? என்று அவன் கனவுலகிற்குள் சிக்கிக் கொள்வோம். ஓர் இயற்பியல் பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கும் முன் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை தெளிவாகப் படித்தல் அவசியம் .ஏனெனில்,அதையொட்டி தான் அந்தப் பாடமே மேற்கொண்டுச் செல்லப் போகிறது. அதுபோல,படத்தின் ஆரம்பக் காட்சிகளைச் சரியாகப்புரிந்துக் கொண்டால்,கனவுலகில் பயணிக்க நாமும் தயாராகி விடலாம். கோட்பாட...