Skip to main content

Posts

கனவு சீரிஸ்- 1 பசுபதியின் வளர்ப்புக் காளை

மதியதூக்கத்தில் ஒரு நீண்ட கனவு இன்று. கனவுகள் என்றுமே விசித்திரமானவை. ஏன் வருகிறது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால் தூக்கத்தில் கனவை நல்ல 'அனுபவிப்போம்'. எது அனுபவிக்கிறதோ! எனக்குப் பெரும்பான்மை நேரங்களில் விழிப்பு வந்தவுடன் கனவு மறந்துவிடும். ஒரு சில கனவுகள் துணுக்குப் போல் ஏதாவது நியாபகம் இருக்கும். நம் நினைவுகளிலிருந்து தான் கனவுகள் தோன்றுகின்றன என்று பொதுவாக சொல்வதுண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நான் இறங்கியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் மனதில் நினைப்பவை தான் கனவாக எனக்கு வரும். ஏதோவொரு சமயத்தில் ஒரு சின்ன சிந்தனை கீற்று மனதில் வந்திருக்கும். உறக்கத்தின்போது கனவில் அன்று பெரிதாக விரியும் அது.   எனக்கு வரும் கனவுகளில் அதிகமானவை, எங்காவதொரு இடத்தில் மாட்டிக்கொள்வேன். ஏதாவது பாழடைந்த வீடு, கோயில், எந்த இடமென்றே தெரியாது.  மாட்டிக்கொண்டு வெளியில் வருவேன் என்றெல்லாம் இல்லை. ஆனால் வெளியில் வருவதற்கு போராடிக் கொண்டிருப்பேன். கனவா நிஜமா என்றே தெரியாமல் பயத்தில் கத்துவது, அழுவதெல்லாம் உண்டு. எங்கேயோ மாட்டிக்கொண்டிருப்பதையே  மறந்து கனவில் வேறொரு கதைக்கு தாவிச் ச...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

மறுபடியும்

இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார்.  1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம்.  "கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷ...

முதல் ரயில் பயணம்

  கல்லூரி முடிக்கும் வரை தனியாகப் பேருந்து கூட ஏறியதில்லை. பக்கத்து தெருவிற்குச்  செல்வதனால் கூட உடன் யாரேனும் துணைக்கு வருவர். முதல் முறை தனியாகப் பயணம் செய்ய ஆசை வந்தது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி தேர்விற்கான தேர்வு மையம் கோவையில்  அமைந்தது. வீட்டில் அனுமதி வாங்கச் சரியானக் காரணமாக அமைந்தது. ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கு முன்னர் ரயிலில் பயணித்ததில்லை. பயணச்சீட்டு முன்பதிவிலிருந்து எங்கு நிற்க வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்பது வரை தோழிதான் பார்த்துக் கொண்டாள்.  தனியாகப் பயணித்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்துடன்  ஆரம்பித்தது, என்னுடைய சேலம் - கோவை, 3 மணி நேர ரயில் பயணம் . எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி,  திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குச் செல்லும் குடும்பத்தினர், வந்து நிற்கும்  ரயில்களில் , ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், 'ச்சாய்', 'சம்சே' என்று கூவிக்கொண்டே கூட்டத்தில்  லாவகமாக  உள்ளே சென்று வெளியே வரும் விற்பனையாளர்கள்,  தினசரி பயணம் மேற்கொள்ளும் அலுவலர்கள் , ரீல்ஸ் ...

சாத்தானின் கடவுள்- பா.ராகவன்

  கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்றாங்களே, உண்மையிலே மேல தான் இருக்கானா? இல்ல கீழ, சைட்லனு, எங்கதான் இருப்பான்? மொதல்ல, அந்த 'இருப்பான்'ன்றதே இருப்பானா, இருக்காளா, இல்ல இருக்குதா?  காக்கா, குருவி, ஈ, எறும்பு, நாய், பூனைனு அதுங்களுக்கும் நமக்கு மாரியம்மா, காளியம்மானு ஒவ்வொன்னுத்துக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்குற மாதிரி தனித்தனியா கடவுள் இருந்து, சாமி கும்பிட்டு வேண்டிக்குங்களா என்ன? கடவுள் என்னும் கருத்துரு, ஒரு மனிதனுக்கு அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள். எழாத ஆளில்லை, நாளில்லை. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்?  இன்றைய நாளில் எதற்கும் வரலாறு எழுதப்படாமல் இல்லை. பா. ராகவனே உணவின் வரலாறு, ஆர். எஸ். எஸ் வரலாறு, காஷ்மீர் வரலாறு, இராமானுஜர் வரலாறென்று எக்கச்க்கமாக எழுதியிருக்கிறார். அப்படியிருக்க, கடவுளின் வரலாறை ஒருவர் எழுத முடியுமா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன? அதைத்தான் காலங்காலமாக மதங்கள், இன்னபிற அமைப்புகளின் மூலம் ஆன்மீகவாதிகள் போதித்து வருகின்றார்களே. அப்படியிருக்க, பாரா என்ன விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் ...

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

  முதல் முறை பெருநகரத்தில் வசிக்க நேர்ந்த பொழுது அன்பினால் சில இன்னல்களுக்கு ஆளானேன். நீ என்ன வேணாலும் செய்யலாம், எப்படி வேணாலும் இருக்கலாம் நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன் . நீயும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது. நான் பிரியப்படும் நேரத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். ஆனால் நீ பிரியப்படும் நேரத்தில்  நான் உன்னுடன் இல்லை என்றால்  கோபித்துக் கொள்ளக் கூடாது . அப்படி செய்தால் அது அன்பு அல்ல. என் மனதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும் . ஆனால் நான் அப்படி இல்லை என்றால் கோபித்துக் கொள்ள கூடாது .அப்படி செய்தால் அது அன்பு அல்ல. நான் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.  உரிமைக்  கோரினால் அது அன்பு அல்ல . "வாய்ஸ் ரீட் பண்ணாத..." "ஃபேஸ் ரீட் பண்ணாத..." இப்படி அறையில் தங்குபவரிலிருந்து வகுப்பில் உடன் படிப்பவர் வரை  சொல்லித் திரியும் ஐம்பது பேரையாவது கடந்து வந்திருப்பேன். அவர்களிடம் அன்பாக எவ்வாறு இருப்பதென்று என்னால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை. கத்தி மேல் நடப்பது போல் எல்லா சமயங்களிலும் அவர்களின் நிலையைப் புரிந்து நடக்க வேண...