Skip to main content

Posts

நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன்?

கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின்  பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

கொட்டுக்காளி

'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன்.  வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன...

கனவு சீரிஸ்- 1 பசுபதியின் வளர்ப்புக் காளை

மதியதூக்கத்தில் ஒரு நீண்ட கனவு இன்று. கனவுகள் என்றுமே விசித்திரமானவை. ஏன் வருகிறது, எப்படி வருகிறதென்று தெரியாது. ஆனால் தூக்கத்தில் கனவை நல்ல 'அனுபவிப்போம்'. எது அனுபவிக்கிறதோ! எனக்குப் பெரும்பான்மை நேரங்களில் விழிப்பு வந்தவுடன் கனவு மறந்துவிடும். ஒரு சில கனவுகள் துணுக்குப் போல் ஏதாவது நியாபகம் இருக்கும். நம் நினைவுகளிலிருந்து தான் கனவுகள் தோன்றுகின்றன என்று பொதுவாக சொல்வதுண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நான் இறங்கியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நான் மனதில் நினைப்பவை தான் கனவாக எனக்கு வரும். ஏதோவொரு சமயத்தில் ஒரு சின்ன சிந்தனை கீற்று மனதில் வந்திருக்கும். உறக்கத்தின்போது கனவில் அன்று பெரிதாக விரியும் அது.   எனக்கு வரும் கனவுகளில் அதிகமானவை, எங்காவதொரு இடத்தில் மாட்டிக்கொள்வேன். ஏதாவது பாழடைந்த வீடு, கோயில், எந்த இடமென்றே தெரியாது.  மாட்டிக்கொண்டு வெளியில் வருவேன் என்றெல்லாம் இல்லை. ஆனால் வெளியில் வருவதற்கு போராடிக் கொண்டிருப்பேன். கனவா நிஜமா என்றே தெரியாமல் பயத்தில் கத்துவது, அழுவதெல்லாம் உண்டு. எங்கேயோ மாட்டிக்கொண்டிருப்பதையே  மறந்து கனவில் வேறொரு கதைக்கு தாவிச் ச...

வாராணசி - பா. வெங்கடேசன்

  பா. வெங்கடேசனின் 'வாராணசி' வாசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தோழி ஒருத்திக்கு வித்தியாசமாக ஏதாவதொரு நாவல் பரிசளிக்கலாமென்று தேடி பா. வெ வின்  'ராஜன் மகள்' வாங்கினேன். வாசித்துவிட்டு இனிமேல் இந்த ஆளுடைய நூல்கள் எதையுமே வாசிக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். காரணம், நீருக்குள் முழ்கி ரோலர் கோஸ்டர் செல்வதாக இருந்த அவருடைய மொழிநடை. பித்துப்பிடித்துவிடுமே என்று அஞ்சி விலகியிருந்த நான் விதிவசத்தால் நான்கு நாட்களுக்கு முன்னர், வித்தியாசமாக ஏதாவது படிக்கலாமென்ற ஆர்வத்தில் மறுபடியும் ஒரு தற்கொலை முயற்சியாக 'வாராணசி' யை எடுத்துவிட்டேன். படித்தும் முடித்துவிட்டேன். அதைப்பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. பா. வெ வின் மொழிநடையில் சொற்கள் ஒரு சுழல் போன்று சுழல்பவை. கொஞ்சம் பிசகினாலும் அந்த மீளாச்சுழலில் சிக்கி நம்மை பிறழ்வுக்குட்படுத்துபவை.  சொற்களைப் பின்தொடர்ந்து செல்வதென்பது, படபடத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து, மனிதத்தடம் படாத அடர்வனத்துக்குள் சிக்கி திரும்பிச் செல்ல வழி தெரியாமல் பீதியில் கலங்கி நிற்கும் சிறுவனின் நிலையைப் போன்றது. பா. ...

மறுபடியும்

இன்று காலை, ஒரு திரைப்படம் பார்த்தேன். "மறுபடியும்". ஏனோ இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியது. 2024ல் இப்படம் வெளியாகியிருந்தால், வரவேற்பை பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய தேதிக்கு அடித்து தேய்த்த பழைய கதைதான். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்கும் கணவன். மனைவி என்ன செய்கிறாள்? தொலைக்காட்சி தொடர்களில் இந்தக் கதைதான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அன்றைய தேதியிலும் பல கமர்ஷியல் படங்களிலும் கூட இதே கதை பலவாறு கையாளப்பட்டிருக்கும். திருமணத்தைத் தாண்டிய ஆண்-பெண் உறவை "சதிலீலாவதி"யில் நகைச்சுவையாகக் கையாண்ட பாலுமகேந்திரா, "மறுபடியும்"ல் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டுள்ளார்.  1982 ம் ஆண்டு இந்தியில் வெளியான "அர்த்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மறுபடியும்" 1993 ல் வெளியாகியது. படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை யார்? அந்த இயக்குநர் பாலுமகேந்திரா தானே என்றெல்லாம் கற்பனையை ஓட்டாமல், ஒரு திரைப்படமாக மட்டுமே பார்த்தால் நலம்.  "கவிதா உனக்கொன்னு தெரியுமா? நம்ம சாஸ்தரத்துல சொல்லிருக்கு. பொண்டாட்டிங்கறவ தம் புருஷ...