Skip to main content

Posts

கந்தகோட்டம்

சென்னை‌ பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். நீண்ட நாளைய திட்டமெல்லாம் இல்லை. சென்னையில் இருக்கிறேன். அரைமணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் போல் இன்றும் ‘திடீரென்று’ தோன்றியதால் உடனே சென்றுவிட்டேன். இவ்வாலயம் குறித்து நான் அறிந்திருந்ததெல்லாம், இராமலிங்க அடிகளார், தன் ஒன்பதாம் அகவையில் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தெய்வமணிமாலையை இயற்றியது இத்தளத்தில் தான். அச்செய்தி,  இக்கோவிலுக்குச் செல்வதில் ஒரு ஆவலை உண்டுபண்ணியிருந்தது.  இரவே இத்தளத்தைக் குறித்து கொஞ்சம் படித்து மனதில் கற்பனைகளை வளர்த்திருந்தேன். காலையில், சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 'கூகுள் மேப்ஸ்' போட்டு சுற்றும்முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கலானேன். வழியிலெங்கும் சிறு சிறு இரும்புக் கடைகள், பாத்திரக் கடைகளாய் இருந்தன. கோவிலை நெருங்க நெருங்க சில செம்பிலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் தென்பட்டன. கோவில் உள்ள தெருவென்று, மக்கள் சாலையை அங்கப்பிரதட்சண பாதை போலவா வைத்திருப்பார்கள். சென்னையின் இதர வழக்கமான முகம்ச...

ஓர் எரிச்சல் பதிவு

 “அந்த சோயாவ வெச்சி ஒன்னு செய்யும் பாருங்க…ஓட்டல் கூட தோத்துடணும். ஒம்பதாங் க்ளாஸ் தான் படிக்கிது. வீட்ல எல்லா வேலையும் செய்யும்‌. ஒடம்பு பெருசா இருக்கறதுக்கு காலைல ஓடிட்டு ஸ்கூல் போகும். கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போய்ட்டு ஏதோ அவார்டுலாம் வாங்கிருக்கு.” கண்ணில் அப்படி ஒரு பெருமை அந்த மூதாட்டிக்கு. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம்.  அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பெண்மணிகளுக்கும் அவருக்கும் அதற்கு முன்னர் பழக்கம் இருந்தது போல் அவர்களின் உடல்மொழி இல்லை. பேருந்தில் அமர்ந்திருந்த ஐந்து நிமிட பழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களும், தன் பேத்தியைக் குறித்த பெருமிதத்தில் திளைக்கும் அந்த நெடிந்த, மெல்லிய தோற்றமுடைய அம்மூதாட்டியை உண்மையிலே ரசிப்பது போன்றதொரு பொய்யான பாவனையை காட்டிக் கொண்டிருந்தனர்.  அவரின் அருகில் இருந்த இன்னொரு நடுத்தர வயதுள்ள பெண்மணி இக்காட்சியைக் கண்டு, அப்பெருமிதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் போல் நெளிந்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டியின் மருமகளாக அவர்‌ இருப்பார் என்பது என் கணிப்பு. மூதாட்டி விட்டதும் அப்பெண்மணி தொடங்கலானார். “பை...

புருஷன்-அராத்து

  அராத்துவின் எழுத்தில், "பொண்டாட்டி", "பிரேக்கப் குறுங்கதைகள்" இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. "பொண்டாட்டி" பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. பொண்டாட்டினா என்ன, ஒரு ஆம்பளைக்கு பொண்டாட்டின்றவ யாரு, பொண்டாட்டின்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த சமூகத்துல என்ன பிம்பம் இருக்கு என்பது போன்ற முக்கியமான கேள்விகளை அது முன்வைத்திருக்கும். பெண் கதாப்பாத்திரங்களைச் சிறப்பாக எழுதும் ஆண் எழுத்தாளர்களை, ஒரு பெண்ணா உருமாறி எழுதிருக்காரு, பெண்ணுடல்ல ஊடுருவி எழுதிருக்காரு என்றெல்லாம் பலர் சொல்லுவர். அதிலெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாமல் இருந்தது. புருஷனை வாசித்துவிட்டு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. இப்பொழுது யோசித்தால், பொண்டாட்டி, அரைகுறையாக பெண் வேடமணிந்த ஆண் எழுதியது. புருஷன், முழுக்க முழுக்க எந்த ஒப்பனையும் இல்லாத ஒரு ஆண் எழுதியது. அதனால் தான் பொண்டாட்டியை விட பல மடங்கு சிறப்பாக புருஷன் வந்துள்ளது. நாவல் குறித்த சாரு நிவேதிதாவின் உரையைக் கேட்டுவிட்டு புருஷனை வாசித்த பொழுது பல விஷயங்களை கூடுதலாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. பின்நவீனத்துவம்,...

நான் ஏன் என்னை ஜார்ஜாக உணர்ந்தேன்?

கடந்த வாரத்தில், ஓர் இரவில் மென்மையான இசை கேட்கும் ஆவலில் எஸ்தாஸ் தோனேவின் "13 Songs of Truth" ஆல்பம் கேட்க ஆரம்பித்து, அது "பிரேமம்" படத்தின்  பின்னணி இசைக்கோர்வையான "Unfinished Hope" ற்கு கொண்டு போய் விட்டது. அது எப்பொழுதும் போல் என்னுடைய பத்தாம் வகுப்பு நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. உடனே எனக்கு பிரேமம் படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வந்து அன்றிரவே பார்த்தும் விட்டேன். அநேகமாக அப்படத்தை அன்று நான் பார்த்தது இருபதாவது முறையாக இருக்கலாம். அல்லது அதற்கு மேலாகக்கூட இருக்கலாம். இரவு நான் தூங்கச் சென்ற போது மணி பதினொன்று. இன்னும் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு முந்தைய நாளிரவு, ஏதோவொரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரேமம் படத்தை, தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்கிக் கொள்வதற்காக பத்தரை மணிவரை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிரேமம் படத்திற்கும் எனக்கும் இரவிற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் போல. முதன்முதலில் அப்படத்தைப் நான் பார்த்ததுகூட லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு இரவு வேளையில்...

அ-காலம்- சாரு நிவேதிதா

சமகால அரபி இலக்கியம் குறித்து, 2021-ம் ஆண்டு, பிஞ்ச் செயலியில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சாருவின் லெபனான் பயணத்தின் அனுபவக் கட்டுரைகளாக ஆரம்பித்து, இஸ்ரேல், சிரியா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, ஈராக், சவுதி,  எகிப்து என பல மத்திய தரைக்கடல் நாடுகளின் கலாச்சாரம், இசை, இலக்கியம் வழியாகப் பயணித்து ஒட்டுமொத்த அரேபிய வாழ்வின் சித்திரத்தை வரைந்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.  மனித குலம் தோன்றியதிலிருந்தே மறதி ஒரு பெரும் நோயாக இருந்திருக்கும் போல. அதனால் தான் பாறைகளில் கீற்றோவியங்கள் வரைந்து, மாபெரும் கட்டிடங்கள் எழுப்பி, பொதுவில் சிலைகள் வைத்து சில விஷயங்களை நினைவூட்டிக்கொள்ள முயன்றிருக்கிறான் மனிதன். பெய்ரூத்திலிருக்கும் குண்டுகள் துளைத்த கட்டிடங்கள், இன்னும் நூறு ஆண்டுகளுக்காவது லெபனானின் வன்முறை சுவடுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அதுவே அம்மக்களை இன்று அமைதி வழியில் தமது உரிமைகளுக்காகப் போராட வைத்திருக்கிறது.  கடவுளின் இருப்பு குறித்தான சந்தேகம் இந்நூலை வாசித்த பொழுது அதிகரித்தது. வாழ்க்கையே ஒரு போராட்டமாக, சாபமாக, உயிர்பிழைத்திருப்பதே பூர்வஜென்ம புண்...

கொட்டுக்காளி

'கொட்டுக்காளி' டிரெய்லர் பார்த்த போது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்து, அந்தப் படம் எனக்கு ஒத்துவர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினாலே படத்தை பார்ப்பேன். அதனால் கொட்டுக்காளிக்கு நல்ல விமர்சனங்கள் வந்திருந்தாலும் நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களாக என்னுடைய யூடியூப் ஃபீட் சும்மா சும்மா வந்து கொட்டுக்காளி சம்மந்தமான காணொளிகளையே காட்டிக்கொண்டிருந்ததால், சரி என்னதான் எடுத்திருக்கிறார்களென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து இன்று மதியம் படத்தைப் பார்த்தேன்.  வித்தியசாமாக ஏதோ முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே தோன்றியது எனக்கு. உடனே உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று ஓடி வரக்கூடாது. எப்படிப்பட்ட படமாக இருப்பினும் உணர்வுபூர்மாகக் காட்சிகளுடன் நம்மைப் பிணைக்க வேண்டும். அப்பொழுது தான் நம்மால் கதைக்குள் ஒன்ற முடியும். இல்லையெனில், ஏதோ ஓடுது, பார்த்தேன் என்பது போல் தான் இருக்கும். இந்தப் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. படத்தை நாயகியின் (அன்னா பென்) வழியாகப் பார்ப்பதா, சூரியின் வழியாகப் பார்ப்பதா, இல்லை எதன...