Skip to main content

Posts

டிராகுலா: எ லவ் டேல்

உலகிலேயே தலைசிறந்த உறவு எது என்று உங்களைக் கேட்டால் எதைக் கூறுவீர்கள்? தாய், தந்தை மூலம் தான் நமக்கு உயிர் கிடைக்கிறது. தம்பி, தங்கை, அக்கா, அண்ணா எல்லாம் நம் இரத்தங்கள். தோழன், தோழிகளெல்லாம் நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவுகள். எந்த இரத்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களுடன் பலகாலம் உறவாடுகிறோம். நம்மில் இருந்து உருவாகும் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதையெல்லாந்தாண்டி குரு என்றொருவர் இருக்கிறார். அவர் பெற்ற ஞானத்தையெல்லாம் நமக்கு அளிக்கிறார். இவர்கள் எல்லோருமே நம் வாழ்வில் முக்கியமானவர்கள் தாம். ஆனால், எந்த உறவுக்காக உங்கள் உயிரை தருவீர்கள்? அட, சும்மா பேச்சுக்கெல்லாம் எதையேனும் சொல்லக் கூடாது.  ஜென்ம ஜென்மமா தாய் மகன் உறவு, தந்தைக்காக மகள் கட்டிய பாசக்கோட்டை, அண்ணணுக்காக தன் மூக்கை அறுத்து கொடுத்த தம்பி, தன் நட்பை ஏற்றுக்கொள்ளாத தோழியின் மீது ஆசிட் வீசி கொன்ற தோழன். இப்படியெல்லாம் எங்கேயாவது செய்திகள் வெளியாகி கேட்டுள்ளோமா? எல்லா உறவையும் இயல்பாக ஏற்று, ஒத்துவரும்வரை ஒன்றாக இருந்து, பிடிக்கவில்லையெனில் விலகியோ தூக்கியெறிந்தோ செல்லும் நாம், இந்த எழவெடுத்த காதலில் மட்டும் ஏன் இவ்வளவு ...

ஒன் டே கெஸ்ட்

தோழியொருத்தி அளித்த பேய்க்கதையின் உபயத்தால், இரவு முழுவதும் மணிக்கொருமுறை விழிப்பு வந்து அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தேன். விடியற்காலையில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழிப்பு வந்து, கதவைத் திறந்தேன். ஒரு கையில் பேகுடன், இன்னொரு கையில் டிராலியை இழுத்துக் கொண்டு ஒருவள் அறையினுள் நுழைந்தாள்.  "அந்தக் காட் எனக்குக் குடுத்திருக்காங்க" என்றாள். அந்தக் கட்டில் மற்றும் இன்னொரு கபோடினில் பரப்பி வைத்திருந்த என்னுடைய பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கையில்  என்னமோ கேட்டாள் அவள்.  தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் என்னமோ உளற, தேமே என்று விழித்தாள். "நான் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன்" என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். "நல்ல வேல, நைட்டு ஃபுல்லா இன்னும் எத்தனை நாளைக்கு ரூம்மேட் இல்லாம தனியா நேத்து மாரி பயந்துகிட்டு இருப்பமோனு நெனச்சிட்டிருந்தோம். எப்பிடியோ காலைலே ஒருத்தி வந்து சேந்துட்டா. பாக்க ஓரளவுக்கு நல்ல புள்ளயாதான் தெரியுறா.‌ செட் ஆய்டும்" என பல யோசனைகளுடன் முகத்தைக் கழுவிவிட்டு, குளியலறையைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். "நான் இங்க ஒரு நாள் தான் தங்...

காஸ்ட் அவே

பேஸ்புக்கில் ஒருவர் எழுதிய பதிவை வாசித்து, ‘காஸ்ட்‌ அவே’ திரைப்படம் பார்த்தேன். திரைப்படம் எனக்கு‌ப் பிடித்திருந்தது. கடிகாரத்தில் முள்ளாக நேரத்தை துரத்திக் கொண்டிருக்கும் நாயகன் (டாம் ஹேன்க்ஸ்) டெலிவரி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். புத்தாண்டின் மாலைக்குள் திரும்பி வருவதாக காதலியிடம் உறுதியளித்துவிட்டு டெலிவரி சம்பந்தமான பிரச்சனை ஒன்றை தீர்க்க மலேசியாவிற்கு விமானத்தில்  செல்கிறார்.  பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருக்கையில் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி, அவருடன் பயணித்தவர்கள்‌ இறந்து விட, நாயகன் மட்டும் தப்பி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான். அதன் பிறகு அத்தீவில் அவனுக்கு என்ன நடக்கிறது, மீண்டும் தன் வீடு திரும்பினானா என்பது தான் கதை. கதையைக் கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா, படமும் அப்படித்தான். இரண்டரை மணிநேரம் சென்றதே தெரியவில்லை. படத்தில் எனக்குப் பிடித்த அம்சம் எதையும் மிகையாகக் காட்டாதது தான். படத்தின் முதல் முப்பது நிமிடங்களில் நாயகனின் குணாம்சத்தை விளக்க மிகக் கச்சிதமாகக் காட்சிகளை அமைத்திருந்தனர். படத்தில் நாயகனான டாம் ஹேன்க்ஸின் நடிப்பு‌ பிரமாதமாக இருந்தது. இப...

கனவு சீரிஸ்- 2

கனவு- 1 இன்றைய மதிய வேளை தூக்கத்தில் ஒரு வினோதமான கனவு. எவருடைய வீடென்று தெரியவில்லை. எப்படியோ அவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். வீட்டிற்கு வெளியே திண்ணைக்கு அருகில் ஒரு சைக்கிளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதன் ஹேண்டில் பாரில், உடலில் பெரும்பாலான பகுதிகளில் நீலமும் சில பகுதிகளில் கருமையும் கலந்த நிறத்தில் ஒரு சிறிய பறவை அமர்ந்திருக்கிறது. அழகாக இருக்கிறதே என்று அதனருகே சென்று அதனைத் தொட முயற்சிக்கிறேன்.  என்னவொரு ஆச்சரியம், அசையாமல் சிறு சினுங்களோடு அப்படியே அது இருக்கிறது. . சரி‌ என்று அதன் முன்‌ பக்கம் சென்று பார்த்தால். அதன் அலகு அகன்று திறந்திருக்கிறது. உள்ளே பார்த்தால், ஒரு பறவையின் கூடும் அதில் இரண்டு குஞ்சுகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அந்த நொடியே அதிர்ச்சியில் தூக்கம் களைந்து எழுந்துவிட்டேன்.  திடீரென்று இப்படி ஒரு கனவு வந்திருக்கிறதே என்று நிதானத்திற்கு வந்த பிறகு யோசித்தேன். அது ஒன்றுமில்லை, இரண்டு நாட்களாக ஒரு காக்கையினால் துறத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்திருக்கும் அரசமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி குஞ்சு பொரித்திர...

வெண்ணிற இரவுகள்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

  கையில் நூலெடுத்து வாசிப்பதற்கு ஒரு நாளில் ஒரு மணி கூட இல்லாத சமயத்தில், தஸ்தயேவ்ஸ்கியியை வாசிக்கலாம் என்ற திட்டமும் இல்லாமல், எப்படி வெண்ணிற இரவுகளை கையிலெடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. பனி படர்ந்த ஆளரவமற்ற சாலையில், பத்தடி தூரத்தில் மங்கலான ஒளியில் ஒரு மனித உருவம் உங்களை நோக்கி வருகிறது. நெருங்க நெருங்க மெல்ல அதன் நடை, உருவத்தோற்றத்தில் ஏதோ ஓர் உள்ளார்ந்த பரிச்சயம் தெரிகிறது‌. எதிரில் நேருக்கு நேர் அதன் முகத்தைக் காண்கிறீர்கள். அச்சு அசப்பில் அது நீங்கள் தான். அந்தக் கணத்தில் எப்படியொரு  தாங்கொணா அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாவீர்கள். வெண்ணிற இரவுகளை வாசிக்கையில், அதன் நாயகன் தன் கதையைச் சொல்ல சொல்ல அப்படியொரு அதிர்ச்சியிலும் சொல்லவியலா ஏதோ ஓர் உணர்வாலும் பீடிக்கப்பட்டேன்.  சிறு வயதிலிருந்தே "வித்தியாசமானவள்" எனும் அடைமொழியைச் சுமந்து திரியும் எனக்கு(அப்படி திரிவதில் கொஞ்சம் பெருமையே ஆயினும்) நாம நெஜமாவே "அப்நார்மலோ" என்று பல முறை என்னை நானே சந்தேகித்து வருந்திய நாட்கள் உண்டு. அதை தகர்த்தெறிந்தது சாரு நிவேதிதாவின் "எக்ஸிஸ்டன்ஷியலிஸமு...

மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்- 2025ல் வாழும் 'யூத்' விஜய்

நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒரு திரைப்படம் பார்த்தேன். "மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங்க்". எதேச்சையாக யூடியூபில் உலவும் போது கண்ணில் பட்டது. காட்சி துணுக்குகளாகவே முழுப்படமும் இருந்தது. இப்படத்தைத் காண என்னைத் தூண்டியது என்னவெனில், நான் பார்த்தது படத்தின் க்ளைமேக்ஸிற்கு முந்தைய காட்சி. படத்தின் நாயகன் புதுமுகம் போலிருந்தார். ஆனால் ஏனோ முதல் பார்வையிலேயே அவரை ஹீரோ என்று மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. அவரின் நடிப்பு ஒன்றும் ஆஹா ஓஹோ‌ என்றிருந்தது என்று சொல்லவரவில்லை. சில இடங்களில் உணர்ச்சிகளை‌ வெளிக்கொணர திணறினாலும்‌ சில இடங்களில் மிகைநடிப்பாக இருந்தாலும் ஓரளவிற்கு சமாளித்து மொத்த படத்தையும் ஒரு ஹீரோவாக தாங்குகிறார் என்றே‌ எனக்கு தோன்றியது. அவருக்காகவே அத்திரைப்படத்தைப் பார்த்தேன். காமெடி நன்றாகவே வருகிறது அவருக்கு. வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நடிப்பை மேம்படுத்திக் கொண்டால் ஹரிஷ் கல்யான், கவின், ரியோ ராஜ் வரிசையில் வருவார்.  படத்தின் கதை மிகவும் பழைய, எளிமையான கதைதான். கல்லூரி முடித்து வெட்டியாக திரியும் ஹீரோ, அவருக்கொரு காதல், அது நிறைவேறியதா என்பதுதான் கதை. இதற்கிடையில் ...